பொதுத்தேர்தல் குறித்து ஆராய்வு – தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

images 15
images 15

சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பிலும், அடுத்துவரவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பிலும் ஆராய்வதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்று கூடவுள்ளது

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இக்கலந்துரையாடல் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்