கல்குடா பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

Young man who went swimming drowns T24
Young man who went swimming drowns T24

மட்டக்களப்பு கல்குடா, பேத்தாழை ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கும்புறுமூலை – வெம்பு பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்குடா காவல்துறை சுழியோடிகளால் மீட்கப்பட்ட சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.