கேரள மாநிலத்தில் அனுமதிபெற்று நாய்களுக்கு பிரமாண்ட திருமணம்!

dog marriage
dog marriage

இணையத்தளத்தில் ஜோடி தேடி நாய் குட்டிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவமொன்று கேரள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள புன்னையூர் குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள், தமது செல்லப்பிராணியான நாய் குட்டிக்கு காவல்துறையினரின் அனுமதியுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தமது நாய் குட்டிக்கு இணையான ஜோடியை இணையத்தளத்தின் உதவியுடன் தேடி கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து திருச்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று(20) காலை திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு 2 குடும்பத்தினரும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டனர்.

சுமார் 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்த திருமண நிகழ்வில் பிரியாணி உள்ளிட்ட பலவகை விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

நாய் குட்டிகளுக்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சி, அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.