பிரதமர் பதவிக்கு கொழும்பில் போட்டியிடப்போகும் சஜித்

6 huj
6 huj

பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சஜித் பிரேமதாசவை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடச் செய்ய கட்சி தீர்மானித்துள்ளது.

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சஜித் பிரேமதாச கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட அனுமதி கோரிய நிலையில் அதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் போது நாடு முழுவதும் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக பயணிக்க வேண்டியுள்ளதால் கொழும்பிலிருந்து செயற்படுவதன் மூலமே அது சாத்தியப்பட முடியுமெனத் தெரிவித்திருக்கும் சஜித் பிரேமதாச இந்தத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கட்சித் தலைமையிடம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க சஜித்தின் கோரிக்கை தவறானதல்லவெனவும், வரவேற்கக் கூடியதெனவும் அவரால் இலகுவாக வெற்றி பெறக் கூடிய மாவட்டமாக கொழும்பு மாவடத்தைக் கருதுவதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தான் விரும்பும் ஒருவரை நிறுத்த இடமளிக்குமாறும் சஜித்தின் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.