ரணில் நாடு திரும்பியதும் கட்சிக் கூட்டம்!

1 unp
1 unp

இந்தியா சென்றிருக்கும் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதன் பின்னரே ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டம் எப்போது நடைபெறும் என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்துக்கான செயற்குழுக் கூட்டத்தை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் கூட்டுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளது. புதிய செயற்குழு ஜனவரியில் கூடிய பின்னரேயே கட்சியின் பொறுப்புக்களுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும்.

கட்சித் தலைமைத்துவம் உட்பட நிருவாக மாற்றம் தொடர்பில் செயற்குழுக் கூட்டத்திலேயே உத்தியோகபூர்வமாக தீர்மானிக்க முடியுனெவும் அவர் மேலும் கூறியுள்ளார்.