முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சிவாஜிலிங்கத்திடம் இன்று விசாரணை

109510112 m.k.sivajilingam01 1
109510112 m.k.sivajilingam01 1

கடந்த மே மாதம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்னி இறுதியுத்த படுகொலை நினைவுநாளை அனுஸ்டித்தமை தொடர்பில் ,அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கட்சியின் செயலாளரும்,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தான் இன்று பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு செல்லும் விடயத்தை அவர் வெளியிட்டுள்ளார் .

இந்த அழைப்பாணை தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றைய தினம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணை பிரிவில் முன்னிலையாக வேண்டிய அவர் அத்தியாவசிய வைத்திய பரிசோதனைக்காக தாம் செல்ல இருப்பதனால் இன்று தாம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணை பிரிவில் முன்னிலையாவேன் என நேற்று முன்தினம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது .