மருத்துவ சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையில் துரித மாற்றம்

1 thil
1 thil

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையில் துரித மாற்றம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கடந்த வாரம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன் விளைவாக மோட்டார் போக்குவரத்துக்கான சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் வைத்திய சான்றிதழ் என்பன வழங்கும் நடவடிக்கையை அரச வைத்தியசாலைகள் ஊடாக முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்காக விண்ணப்பங்களை ஒப்படைத்த ஒருவருக்கு அதனைப் பெற்றுக் கொள்ளும் நேரம் குறித்து குறுந்தகவல் ஊடாக அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் உபாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.