தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

01 5
01 5

மட்டக்களப்பு சுதந்திர மனித அபிவிருத்தி கழகத்தின் ஏற்பாட்டில் கல்குடா தொகுதியிலுள்ள வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

01 3

கிண்ணையடி, சுங்கான்கேணி, கும்புறுமூலை, விநாயகபுரம், புதுக்குடியிருப்பு, கல்மடு ஆகிய கிராமங்களில் வசிக்கும் வறிய  மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் சுதந்திர மனித அபிவிருத்தி கழகத்தின் அனுசரனையில் கனடாவில் வசிக்கும் சிவகுமார் ராசையாவின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கிய உதவி மூலம் உதவி வழங்கி வைக்கப்பட்டது.

01 2

இதன் போது  வறிய மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கல்வி உபகரணங்கள் அடங்கடலான கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் மட்டக்களப்பு கழக நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.சேகர், அகில இலங்கைக்கான அங்கத்துவ பொறுப்பாளர் அ.வாசுதன் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.