திருகோணமலை மாவட்டத்தில் முதலிடம் பெற்று மாணவி சாதனை

FB IMG 1577521549113 1
FB IMG 1577521549113 1

உயர்தர பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் M.பாத்திமா முஷாதிகா உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மூதூர் பெரியபாலம் நூராணியா பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி M.பாத்திமா முஷாதிகா உயிரியல், இரசாயனவியல் ஆகிய பாடங்களில் 2A சித்திகளையும் பௌதீகவியலில் B சித்தியினையும் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினை பெற்றுக்கொண்டார்.

பெற்றோரின் கனவை நனவாக்கிய மாணவி முஷாதிகா தனது ஆரம்ப கல்வியை மூதூர் இமாம் ஷாபி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை அந்நஹார் மகளிர் மகா வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை திருகோணமலையிலும் கற்றவராவார்.