குளவி கொட்டுக்கு இலக்காகி 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி

thumb large Wasp Kulavi
thumb large Wasp Kulavi

நோர்வூட், ஸ்டொக்ஹம் தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் இன்று (13) குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதன்போது, 18 தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 5 பேர் மாத்திரம் சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.