நோர்வூட், ஸ்டொக்ஹம் தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் இன்று (13) குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதன்போது, 18 தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 5 பேர் மாத்திரம் சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.