முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இருட்டுமடு கிராமத்தில் வசிக்கின்ற 115 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன
இத்தாலி ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி அம்மன் தேவஸ்தான நிர்வாகத்தினர்கள் இத்தாலி மனிதநேய சங்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு வறிய மக்களுக்கு உலர் உணவு வழங்கும்படி கேட்டதற்கிணங்க முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இருட்டுமடு கிராமத்தில் வசிக்கின்ற தெரிவுசெய்யப்பட்ட 115 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது
இதனடிப்படையில் இத்தாலி மனிதநேய சங்கத்தின் ஸ்தாபகர் மஸ்வரநாதன் கிருபாகரன் அவர்களது ஏட்பாட்டில் நேற்று (17) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இருட்டுமடு கிராமத்தில் இத்தாலி மனிதநேய சங்கத்தின் தலைவர் எஸ் புஸ்பகாந் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்துகொண்டு குறித்த உலருணவு பொதிகளை மக்களுக்கு வழங்கி வைத்தார்