ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

rajitha 1
rajitha 1

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.

5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் அவருடைய கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டது.

மேலும் வைத்தியசாலையில் சிகிச்சைகள் பெற்று வெளியேறியதன் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறும் உத்தரவிட்டது.

ராஜித சேனாரத்ன வெள்ளை வேன் கடத்தல் தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நீதிமன்ற உத்தரவிற்கமைய ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.