மதூசின் இரண்டாவது மனைவி கைது!

43 f
43 f

மாகந்துரே மதூசின் இரண்டாவது மனைவி டுபாயிலிருந்து வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 6 மாத காலத்துக்கும் அதிகமாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாகந்துரே மதூசைப் பார்ப்பதற்காக நேற்று முன்தினம் அவரும் அவரது பிள்ளையும் காலை 8 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.