திசர பெரேரா இராணுவத்தில் இணைவு

4 3
4 3

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா, இலங்கை இராணுவத்தின் தன்னார்வ படைப் பிரிவில் இணைந்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்காக திசர பெரேரா இவ்வாறு இராணுவத்தில் இணைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தன்னார்வ படைப் பிரிவில் இணைந்துகொண்டுள்ள இவர் மேஜர் பதவியில் உள்ள ஒருவராக செயற்படவுள்ளார். இவர் கஜபா இராணுவப் படைப் பிரிவில் செயற்படவுள்ளார்.

இதற்கு முன்னர் தினேஸ் சந்திமாலும் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் கிரிக்கெட் பிரிவில் இணைந்துகொண்டு தன்னார்வ படைப் பிரிவு அதிகாரியாக செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.