அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள தேவாலயமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில், போர்ட் வொர்த் அருகே உள்ள தேவாலயத்தில் நேற்று பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, உள்ளே நுழைந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இரண்டு பேரை சுட்ட நபரை, அங்கிருந்த தேவாலய பாதுகாப்பு குழு உடனடியாக சுட்டுக்கொன்றது.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.