ஓம் சரவண பாபா அறக்கட்டளையினூடாக முத்தையன்கட்டில் வீடு கையளிப்பு!

suren rahavan 1
suren rahavan 1

ஓம் சரவண பாபா அறக்கட்டளையினூடாக லண்டனில் வாழும் திரு.நிமால் சண்முகநாதன் அவர்களின் நிதியுதவியில் முல்லைத்தீவு   முத்தையன்கட்டு ஜீவநகர் கிராமத்தில்  வீடில்லாமல் வசித்த குடும்பம் ஒன்றிற்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால்  அண்மையில் குடும்பத்தினரிடம்  கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திரு நிமால் சண்முகநாதன் அவர்களின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோரும்,  ஓம் சரவண பாபா அறக்கட்டளையின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சுதர்சன், ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ரமேஸ், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஒட்டுசுட்டான் பிரதேச உறுப்பினர் எஸ்.சத்தியசுதர்சன் உள்ளிட்டவர்களும் கலந்து சிறப்பித்தனர்.