50 சிசுசெரிய பாடசாலை பேருந்துகள் சேவையில்

sis
sis

ஆரம்ப பிரிவு மாணவர்களின் பாடசாலை ஆரம்பமான நேற்றைய தினம் ( 25 ) வட மத்திய மாகாணத்திற்குள் மாத்திரம் 50 ‘சிசுசெரிய’ பாடசாலை பஸ் சேவைகளை மாணவர் நலன் கருதி மீண்டும் ஆரம்பித்துள்ளதாக மாகாண மக்கள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

வட மத்திய மாகாணத்தின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கியவகையில் சுகாதார சட்டதிட்டங்களைப் பேணி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக தேவையான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் அனைத்தும் பஸ் உரிமையாளர்கள், நடத்துனர்கள் மற்றும் சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் வட மத்திய மாகாண மக்கள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் நிலந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.