டெங்கு பரிசோதனைக்காக தனியான வைத்தியர் நியமனம்!

colombo 1
colombo 1

டெங்கு நோயாளர்களின் இரத்தப் பரிசோதனைக்காக இயந்திரம் உட்பட தனியான வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

டெங்கு நோய் பெருமளவில் காணப்படும் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு தற்பொழுது இவ்வாறான இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

டெங்கு நோய் தொடர்பில் சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக நோயாளர்கள் வெளி இடங்களில் உள்ள இரசாயன கூடங்களில் பெருந்தொகை பணத்தை செலவிடுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அனைத்து பிரதான வைத்திய சாலைகளுக்கும் இந்த இயந்திரத்தை வழங்கவுள்ளது.

20 நிமிடத்தில் இதன்மூலம் பரிசோதனை தொடர்பான பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்