கோட்டபாய மீது -ஐ.தே .க குற்றச்சாட்டு

1 b
1 b

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்திருப்பதன் ஊடாக அவர் அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டுவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

19வது திருத்தத்தை இரத்து செய்து, 18வது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்குப் பின்னால் நாட்டில் மீண்டுமொரு சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும் யோசனையே இருக்கின்றது.

இந்நிலையில், அந்த முயற்சியை பொதுத் தேர்தலில் மக்கள் தவிடுபொடியாக்க வேண்டும். நாடாளுமன்றத்தை ஒத்திவைத்ததன் ஊடாக மக்களின் விருப்பு வெறுப்புக்களை தெரிவிக்கும் உரிமையை அரசாங்கம் பறித்துள்ளது. என அவர் கூறியுள்ளார்.