பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்க – ரணில் அழைப்பு

1 ranil wi
1 ranil wi

அனைவரும் ஒன்றுபட்டு கட்சியைப் பலப்படுத்திக்கொண்டு பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்கத் தயாராகுமாறு ஐக்கிய தேசியக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைய கட்சியை வழிநடத்த எவருக்கும் இடமளிக்க முடியாதெனவும் அவர் கூறியுள்ளார்.

குழுக்களாக பிளவுபடாமல் இணைந்து செயற்படுவதன் மூலமே நாம் மீண்டெழ முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுமுறையைக் கழிக்க இந்தியா சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடு திரும்பிய கையோடு கட்சித் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் கட்சி முக்கியஸ்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.