கோட்டாவின் உரையை தோற்கடிக்க மாட்டோம் !

2 dr
2 dr

பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜனாதிபதியின் சிம்மாசன உரை நிகழ்த்தப்பட்டதன் பின்னர் அதனை தோல்வியடையச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியிடம் எந்தவித திட்டமும் கிடையாது என அக்கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையை (சிம்மாசன உரை) தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக கூறப்படுகின்றதே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயெ இதனைக் குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரும் ஊடகங்களில் தொடர்பில்லாமல் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், கட்சிக்குள்ளும், பங்காளிக் கட்சிகளிடத்திலும் இவ்வாறான எந்தவித ஏற்பாடுகளும் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.