குறுந்தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கை!

1 ITSSL
1 ITSSL

கையடக்க தொலைபேசிகளுக்கு வரும் குறுந்தகவல்கள் குறித்து  பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு தற்பொழுது  அனாமதேய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக குறுந்தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.  இவ்வாறாக வரும் குறுந்தகவல்களில் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

அந்த பெறுமதியான பரிசை பெற்றுக்கொள்ள ஒரு தொகை பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறான குறுந்தகவல்கள் கிடைக்கப்பெறுவோர் தமது தனிப்பட்ட விபரங்களை எதனையும் அந்த இலக்கங்களுக்கு வழங்க வேண்டாம் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவர்கள் வழங்கும் வங்கி கணக்கு இலக்கங்களுக்கு பணம் வைப்பு செய்வதையும் தவிர்க்குமாறு அச்சங்கம் கேட்டுள்ளது. அவ்வாறான குறுந்தகவல்கள் தொடர்பில்  தமது சங்கத்திற்கு அறிவிக்குமாறும் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் பொதுமக்களைக் கோரியுள்ளது.