பயணப்பையில் சடலம்; சந்தேக நபர்களை விசாரிக்க உத்தரவு

Pinai
Pinai

சப்புகஸ்கந்தயில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட மட்டக்குளி – சமித்திபுர பகுதியைச் சேர்ந்த தம்பதியரை, 48 மணிநேர தடுப்பில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இருவரும் நேற்று (06) கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று(07) மஹர நீதிவான் நீதிமன்றில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நீதிவான் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சப்புகஸ்கந்த – மாபிம – எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள குப்பைத் தொட்டியிலிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து, பெண் ஒருவரின் சடலம் அண்மையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.