மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

2 3
2 3

நாட்டில் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (11) பிற்பகல் வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதனைத் தெரிவித்துள்ளது.

பதுளை, கொழும்பு, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கண்டி, கேகாலை, குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.