“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கந்தசாமி நகரில் வறுமை நிலையில் வாழ்கின்ற 50 குடும்பத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிதி உதவியினை நியூசிலாந்து தேசத்தின் “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் இணைப்பாளர்களான ரவி மற்றும் றஜனி ஆகியோர் வழங்கியுள்ளனர்.
இவ் உதவியினை செய்த உறவுகளுக்கு மக்கள் சார்பில் எமது நன்றிகளை தெரிவித்து கொள்வதாக ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்
குறித்த நிகழ்வில் பொதுமக்கள், ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினர் ,பயனாளிகள் கலந்துகொண்டனர்