கொவிட் தொற்று உறுதியாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொவிட் தொற்று உறுதியாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை உயர்வடைவதாகப் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.யூ.ரி குலதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதமாகும்போது நாட்டின் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்க கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.