தேசிய பாதுகாப்பு கல்லூரி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு!

kotta 1

தேசிய பாதுகாப்பு கல்லூரி இன்று(11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முப்படை, காவல்துறை மற்றும் அரச துறைகளில் உயர் பதவிகளை வகிக்கும் நிறைவேற்று அதிகாரிகளுக்குத் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட கல்விக்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்தக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலி வீதி கொழும்பு 3 இல் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சிற்கு சொந்தமான மும்தாஸ் மஹால் கட்டடத்தில் இந்த பாதுகாப்பு கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரதான கட்டடம் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.