பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!

DSC 0172
DSC 0172

மேலதிக கொடுப்பனவு , அடிப்படை சம்பள அதிகரிப்பு, 12 ஆண்டு சேவையுடைய சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு இன்று புதன்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

சுகாதார தொழிற்துறையினரின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி கொழும்பு – 10 இல் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் முன்பாக இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பத்தேகம – விமலவன்ச தேரர் வீதியில் கூடிய தொழிற்சங்கத்தினர் வீதியோகத்தில் நின்று தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் வைத்தியர்கள், தாதிகள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

‘அடிப்படை சம்பளத்தை அதிகரி’, ‘சிரேஷ்ட ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கு’, ‘தொழிற்சங்கத்தினரின் உரிமைகளை உறுதி செய்’, ‘மேலதிக கொடுப்பனவை வழங்கு’ என்ற வனசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.