இந்திய உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலத்தை படமெடுத்த 3 பாகிஸ்தானியர்கள் கைது!

1624934089 arrested 2
1624934089 arrested 2

கொழும்பு – தர்ஸ்டன் வீதியில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை புகைப்படம் எடுத்த பாகிஸ்தான் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி, மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்தபோது குறித்த வாசஸ்தலத்தை புகைப்படம் எடுத்ததுடன், ஒளிப்பதிவும் செய்துள்ளதாக கொள்ளுப்பிட்டி காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர்களுக்கு, எதிர்வரும் 25ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேறத் தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.