பொலிஸாரின் இடமாற்றம் தொடர்பில் குற்றச்சாட்டு

police000
police000

வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டமை திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை என பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் 150 தமிழ் பொலிஸாரும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய 4 பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளின் கீழ் 150 தமிழ் பொலிஸாரும் கடமையாற்றுகின்றார்கள்.

அவர்கள் அனைவரும் வடமாகாணத்தினுள் வேறு வேறு மாவட்டங்களுக்கு ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையிலையே அவர்கள் இது பழிவாங்கல் நடவடிக்கை என கூறியுள்ளனர்.