உருளை கிழங்கு உற்பத்தியை உரிய முறையில் முன்னெடுக்க அரசாங்கம் தவறியுள்ளது – இராதாகிருஸ்ணன்

iratha kirishnen1000x600
iratha kirishnen1000x600

மலையகத்தின் ஆறு இடங்களில் உருளை கிழங்கு உற்பத்தி செய்வதற்கு ஏற்ற வளங்கள் இருக்கின்ற போதிலும் அதனை உரிய முறையில் முன்னெடுக்க அரசாங்கம் தவறியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனை விடுத்து வெளிநாடுகளில் இருந்து உருளை கிழங்கை இறக்குமதி செய்வதிலேயே அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.