5ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி தொடக்க உரை நிகழ்த்தவுள்ளார்

gotta5

5ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக பயணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அபுதாபியை நேற்று(03) இரவு 10 மணியளவில் சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை ஜனாதிபதி பல தரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

அதனை தொடர்ந்து இன்று மாலை இடம்பெறவுள்ள மாநாட்டில் ‘சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் தொற்றுநோய்கள்’ என்ற தலைப்பில் தொடக்க உரையையும் ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார்.