யாழில் டெங்கு பரவல் அதிகரிப்பு!

dengue 1
dengue 1

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நடமாட்ட கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பிரவேசிப்பவர்களினூடாக இந்த நோய் பரவல் அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று (06) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.