பெருந்தோட்ட நிறுவனங்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பிற்போடப்பட்டுள்ளது

NTLRG 20211206184651797597 3
NTLRG 20211206184651797597 3

பெருந்தோட்ட மக்களுக்கான நாளாந்த வேதனம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யக் கோரி பெருந்தோட்ட நிறுவனங்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டது.

இதேவேளை, தற்போதைய வாழ்க்கை செலவு அதிகரிப்பிற்கு ஏற்ப பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் உயர்த்தப்பட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இதற்காக வேதன நிர்ணயசபையை விரைவில் கூட்ட தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.