பிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் மேலும் 8 பேர் கைது!

10699746 arrest generic 650x400 71463458726
10699746 arrest generic 650x400 71463458726

பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியை இன்று இடம்பெறவுள்ளது.

கனேமுல்ல – பொல்ஹேன பொது மயானத்தில் இன்று பிற்பகல் இறுதிக்கிரியை இடம்பெறவுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம் நேற்று முன்தினம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதுடன், பின்னர் அவரது பூதவுடல் கனேமுல்ல – பொக்குண சந்தி – கந்தலியத்த, பாலுவ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது இல்லத்துக்கு மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் சென்று நேற்று அஞ்சலி செலுத்தினர்.