யாழ் அரியாலையிலுள்ள வீட்டிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு!

IMG 20211208 WA0036
IMG 20211208 WA0036

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட அரியாலை – புங்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சிறிய ரக மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை வீட்டு உரிமையாளரால்  குப்பைகளை புதைப்பதற்காக கிடங்கொன்று தோண்டப்பட்ட சமயத்திலே அதற்குள்ளிருந்து இந்த குண்டு மீட்கப்பட்டது.

இதனையடுத்து தகவலறிந்து வந்த யாழ்ப்பாணம் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவை பெற்று குண்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.