அநுராதபுரத்தில் 20 மணித்தியால நீர்வெட்டு!

tap water 468x312 626x380 1
tap water 468x312 626x380 1

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக அநுராதபுரத்தின் சில பகுதிகளில் நாளை நள்ளிரவு 12 மணி முதல் 20 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் நீர் விநியோகிக்கப்படும் யாழ்ப்பாண சந்தி, மாத்தளை சந்தி, குருந்தன்குளம், சாலியபுர, ரம்பேவ மற்றும் கல்குலம ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அத்துடன், மிஹிந்தலை நீீர் விநியோகத் திட்டத்தின் மூலம் நீர் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கும் நாளை நள்ளிரவு 10 மணி முதல் நாளை மறுதினம் இரவு 8 மணி வரை நீர்விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.