பதுளை சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த மோதல் சம்பவத்தில் 5 கைதிகள் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்த கைதிகள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.