சபை அமர்வில் மஸ்கெலியா உப தவிசாளர் மீது தாக்குதல்!

thumb jhonstan 1
thumb jhonstan 1

மஸ்கெலியா பிரதேச சபையின் இன்றைய அமர்வில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் அதன் உப தவிசாளர் பெரியசாமி பிரதீபன் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற மஸ்கெலியா பிரதேச சபை அமர்வின்போது, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் கட்டடங்கள்  தொடர்பில் தாம் கருத்து தெரிவித்த போது ஆளும் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் தம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக உப தவிசாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

சம்பவம்  தொடர்பில் காவல்துறை தம்மிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.