பிரியந்த படுகொலை சம்பவம்: மேலும் 18 பேருக்கு விளக்கமறியல்!

1518250118 rangana herath 1 1
1518250118 rangana herath 1 1

பாகிஸ்தான் சியல்கோட்டில், பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட மேலும் 18 சந்தேகநபர்கள், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குஜ்ரன்வாலாவில் உள்ள, விசேட பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில், இன்று அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களை, எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக, பாகிஸ்தான் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னதாக 34 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளதென சியல்கோட் காவல்துறை பேச்சாளர் குர்ரம் சேஷோட் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மேலும் 100 இற்கும் அதிகமானோர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.