நாட்டில் மேலும் 3 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்!

omicron
omicron

நாட்டில் ஒமைக்ரொன் கொவிட் திரிபு தொற்று உறுதியான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்கனவே நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரொன் கொவிட் தொற்று உறுதியாகியிருந்தது.

இந்நிலையில் நாட்டில் ஒமைக்ரொன் கொவிட் திரிபு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், மேலும் ஒமைக்ரொன் கொவிட் திரிபு தொற்றுடன் நாட்டில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படக்கூடும் எனவும் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.