ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு P.S.M. சார்ள்ஸிற்கு அழைப்பு

charls
charls

சுங்கப் பணிப்பாளர் நாயகம் P.S.M. சார்ள்ஸினை ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்றைய தினம் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முடியாத பட்சத்தில் பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவரை முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது,

தங்கச்சுரங்களிலிருந்து பெறப்பட்ட மண்ணை சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்தமை குறித்து ஓய்வுபெற்ற சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஆ. குணரத்னவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த கோப்புக்களை ஒப்படைக்குமாறு தெரிவித்தே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க அமைச்சரவையின் அனுமதிக்குப் புறம்பாக செயற்பட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள், அறுவைச் சிகிச்சை கையுறைகளை வழங்குவதில் முன்னெடுத்துள்ள முறைகேடுகள் குறித்து அவர் இன்றைய தினம் சாட்சியம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.