பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அறிவித்தல்

student
student

வட மாகாணத்தில் பாடசாலை சேவைகள் மற்றும் பயணிகள் சேவைகளில் கட்டணம் அறவிட்டு சேவையில் ஈடுபடும் அனைத்து வாகன உரிமையாளர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்பாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் பதிவுசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை வீதிப்பயணிகள் போக்குரத்து அதிகார சபையின் தலைவர் க.செவ்வேள் தெரிவித்துள்ளார்.

பதிவுகளை மேற்கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களை அதிகாரசபையின் தலைமை அலுவலகம் மற்றும் அதன் கிளைகளிலும் அல்லது வடமாகாண சபையின் இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் யாழ்ப்பாணம் – 021 2215966 , மன்னார் -0773124498 , முல்லைத்தீவு – 021 2290334 , வவுனியா – 0776016161, கிளிநொச்சி – 021 2284920 ஆகிய மாவட்டங்களிலுள்ள கிளைகளின் குறித்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.