கிணற்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு!

4745fc8f 583c 480a 8091 7f122ab0d205
4745fc8f 583c 480a 8091 7f122ab0d205

புங்குடுதீவு 11ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் குறிப்பிட்டனர்.

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிறந்து இரண்டு நாட்களான குழந்தை கொலை செய்யப்பட்டு யூரியா பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு கிணற்றில் போடப்பட்டுள்ளது.
எனினும் யூரியா பையுடன் வேறு வேறாக கலண்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இறந்த சிசுவின் தாயார் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.