மக்கள் வங்கியின் அனுசரணையில் வாழ்வாதார முயற்சிகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வானது வவுனியா இறம்பைவெட்டி கிராமத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதன்போது, இறம்பைவெட்டி மற்றும் கருப்பனிச்சங்குளம் கிராமங்களின் அபிவிருத்தியினைக் கருத்திற் கொண்டு முதற்கட்டமாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள முயற்சியாளர்களில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு
தொழில் முயற்சிக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டதுடன், வறுமைக் கோட்டிற்குட்பட்ட
மாணவர்களுக்கான உதவித் திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், குறித்த கிராமத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பாகவும் கிராம மக்களுக்கு தெளிவுபடுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டது.
இதில் வட பகுதிக்கான அமைச்சுக்களின் இணைப்பாளர் கா. சயந்தகுமார், வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா பிராந்திய காவற்துறை அத்தியட்சகர், மக்கள் வங்கி வன்னி பிராந்திய முகாமையாளர், உதவி பிராந்திய முகாமையாளர், மக்கள் வங்கி வவுனியா கிளை முகாமையாளர், மக்கள் வங்கி ஊழியர்கள், இறம்பைவெட்டி மற்றும் கருப்பனிச்சங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்களும் கிராம மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.