இங்கையிலிருந்து மேலும் 18 பேர் புகலிடம் கோரி தமிழகம் சென்றனர்

1650596613 indian 2
1650596613 indian 2

இலங்கையிலிருந்து மேலும் 18 பேர் தமிழகத்திற்கு புகலிடம்கோரி சென்றுள்ளனர்.

மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 பேர் இன்று அதிகாலை  படகுமூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும், யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், தனி நபர் ஒருவரும் தமிழகம் சென்றுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக, ஏற்கனவே 42 பேர் இலங்கையிலிருந்து படகுமூலம் தமிழகம் சென்றிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.