எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமுகமாக அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் நிரந்தர பிரதிநிதிகளை எதிர்வரும் 17ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஏற்கனவே அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அரச வாகனங்களை தேர்தலுக்கு பயன்படுத்துவது பற்றியும் கலந்துரையாடியுள்ளார்.