இரண்டு எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, 2,800 மெற்றிக்தொன் எரிவாயு தரையிறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாளை முதல் நாளாந்தம் 80,000 சமையல் எரிவாயுக்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.