21ஆம் அரசியலமைப்பு திருத்த வரைவு குறித்து பிரதமர் தலைமையில் விசேட சந்திப்பு

ranil 1
ranil 1

உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்த வரைவு குறித்து, 10 சுயாதீன கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில், இன்று மாலை விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அலரி மாளிகையில், மாலை 5.30க்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்த வரைவு குறித்த தங்களது யோசனைகளை இதன்போது பிரதமரிடம் வழங்க உள்ளதாக பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன், அது குறித்து பிரதமருடன் விரிவாக கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.