3700 மெற்றிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று இலங்கை வருகிறது

gas ship
gas ship

3 ,700 மெற்றிக் தொன்  எரிவாயு தாங்கிய கப்பல் இன்று நள்ளிரவு நாட்டை வந்தடைய உள்ளது.

அத்துடன், எதிர்வரும் 11 ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில். 3 ஆயிரத்து 700 மெற்றிக் தொன் எரிவாயு தாங்கிய 2 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்திற்குள் 30,000 மெற்றிக் தொன் எரிவாயு நாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக அண்மையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் லிட்ரோ நிறுவனம் உடன்படிக்கை கைச்சாத்திட்டது.